search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட் தீர்ப்பு"

    புதுவையில் முதல் மந்திரிக்கே அதிக அதிகாரம் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக கவர்னர் கிரண் பேடி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு 30-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கில், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தும், யூனியன் பிரதேசங்களில் உள்ள கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மந்திரிகளின் அதிகார வரம்பை மீறி செயல்பட முடியாது என முன்னர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.



    இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஜூன் 6-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அலுவல்கள் தொடர்பாக முடிவெடுக்கும் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இருந்த கவர்னருக்கான அதிகாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் முதல் விசாரணை வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
    புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் எனவும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. #PuducherryAssembly #NominatedMLAs
    புதுடெல்லி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில், ஆளுநரே நேரடியாக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.



    இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    அதன்பின்னர் தொடர்ந்து நடந்த வாதப் பிரதிவாதங்கள் கடந்த மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என அறிவித்தனர். மேலும்  எம்எல்ஏக்கள் நியமனம் விவகாரத்தில் மாநில அரசு தலையிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தினர். #PuducherryAssembly #NominatedMLAs
    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்ற மன்றம் உறுதி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு இல்லை என்று கூறிய நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவோ தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

    ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் மொத்தம் 20 தொகுதிகள் காலியாகின்றன. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



    இந்த தீர்ப்பினையடுத்து, தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 110 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை.

    இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    ×