செய்திகள்

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-10-24 16:11 GMT   |   Update On 2018-10-24 16:11 GMT
விக்கிரவாண்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 54), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News