செய்திகள்

களக்காடு அருகே மகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-10-23 12:09 GMT   |   Update On 2018-10-23 12:09 GMT
களக்காடு அருகே மகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள தெற்கு அப்பர்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 35). இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயா (29). இவர்களுக்கு மகள் ஸ்ரீபிரித்திகா(7). இந்நிலையில் கடந்த 19-ந் தேதி மூக்காண்டி விஜயாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது விஜயா, பீடி சுற்றும் நிறுவன பெண்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதாக கூறியுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து ஊருக்கு வந்த மூக்காண்டி பல்வேறு இடங்களில் தேடியும் விஜயா மற்றும் மகள் ஸ்ரீபிரித்திகா கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து மூக்காண்டி களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா அவரது மகள் ஸ்ரீபிரித்திகா எங்கு சென்றனர் என தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News