செய்திகள்

பாபநாசம் அருகே விபத்து - மாணவர் பலி

Published On 2018-10-23 11:56 GMT   |   Update On 2018-10-23 11:56 GMT
பாபநாசம் அருகே விபத்தில் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயன்பேட்டை, அக்கரையார் நகரை சேர்ந்த அப்துல்லா மகன் ரஜீன் அப்துல்லா (வயது 16). இவர் தாராசுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இன்று காலை கல்லூரி செல்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அவர் கும்பகோணம்- தஞ்சை ரோட்டில் வேகமாக வந்த லோடு ஆட்டோ ரஜீன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றிய புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த பரமேஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News