செய்திகள்

திண்டுக்கல் அருகே விபத்தில் அரசு அதிகாரி பலி

Published On 2018-10-22 11:24 GMT   |   Update On 2018-10-22 11:24 GMT
திண்டுக்கல் அருகே பைக் விபத்தில் அரசு அதிகாரி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்தூர்:

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கோட்டைபட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி( வயது 38). இவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

திண்டுக்கல்லுக்கு வந்துவிட்டு சொந்த ஊர்திரும்புவதற்காக வத்தலக்குண்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சித்தையன்கோட்டை பிரிவு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் சுந்தரபாண்டி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே சுந்தரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News