செய்திகள்

மதுரை பெத்தானியாபுரத்தில் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகை கொள்ளை

Published On 2018-10-22 11:18 GMT   |   Update On 2018-10-22 11:18 GMT
மதுரை அருகே ஆசிரியையிடம் நைசாக பேசி 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பெத்தானியாபுரம், தாமரை தெருவைச் சேர்ந்தவர் ஜான் பேரின்ப தாஸ். இவரது மனைவி லைசெம்மாள் (வயது 70). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நேற்று காலை இவர் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

சின்னசாமிபிள்ளை குறுக்குத்தெருவில் வந்து கொண்டிருந்தபோது அவரை 2 டிப்டாப் ஆசாமிகள் வழிமறித்தனர். இந்தப்பகுதியில் வழிப்பறி நடக்கிறது.

எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் எனக்கூறி லைசெம்மாளிடம் இருந்த 7 பவுன் நகையை பேப்பரில் மடித்துக் கொடுப்பது போல் நடித்து திருடினர்.

வீட்டுக்கு சென்ற லைசெம்மாள் பேப்பரை பிரித்து பார்த்தபோது கற்கள் இருந்தது தெரியவந்தது. தன்னை ஏமாற்றி நகையை திருடியதை உணர்ந்த அவர் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News