செய்திகள்

முத்துப்பேட்டை அருகே சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2018-10-17 17:49 GMT   |   Update On 2018-10-17 17:49 GMT
முத்துப்பேட்டை அருகே சைக்கிள் மீது பஸ் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது48). தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை ஆலங்காட்டில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஆலங்காடு மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே முத்துப்பேட்டையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன், சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News