செய்திகள்

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- ராணுவ வீரர் கைது

Published On 2018-10-15 13:21 GMT   |   Update On 2018-10-15 13:21 GMT
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்:

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள முல்லூரை சேர்ந்தவர் அகில். இவர் உத்தரபிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் நேற்று இரவு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

ரெயில் நள்ளிரவு 12 மணி அளவில் ஈரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அவரது இருக்கைக்கு அருகில் இருந்த கல்லூரி மாணவியிடம் அகில் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை ரெயில் சேலம் ஜங்‌ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த மாணவி கீழே இறங்கி வந்து சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் இளவரசி ராணுவ வீரரை அழைத்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தார்.

இந்த சம்பவம் சேலம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News