செய்திகள்
தேனியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
தேனியில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டி அம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் ராஜேஷ் மனைவி சவுமியா பிரித்தி (வயது25). இவர் சின்னமனூரில் உள்ள அறக்கட்டளையில் வேலை பார்த்து வருகிறார். இதன் கிளை தேனி சிவாஜி நகரில் உள்ளது.
இங்கு செல்வதற்காக தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பின் தொடர்ந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சவுமியா பிரித்தி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். சவுமியா சத்தம்போட்டபோதும் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமியா இது குறித்து தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.