செய்திகள்

தேனி அருகே தாய் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2018-10-10 11:28 GMT   |   Update On 2018-10-10 11:28 GMT
தேனி அருகே தாய் இறந்த துக்கத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி அருகே கோட்டூர் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். கூலித்தொழிலாளி. இவரது மகள் மரியவெண்ணிலா (வயது35). இவருக்கும் ராயப்பன்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

மரியவெண்ணிலா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மரியவெண்ணி லாவின் தாய் இறந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மரியவெண்ணிலா சம்பவத்தன்று தனியாக வீட்டில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை தேவசகாயம் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News