செய்திகள்

காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2018-10-09 16:57 GMT   |   Update On 2018-10-09 16:57 GMT
ஓசூர் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

அசாம் மாநிலம் மரிக்கன் மாவட்டம் சாரய்பாய் தாலுகா பகுதியை சேர்ந்தவர் லல்கி மேதி. இவரது மகன் லகியா மேதி (வயது 23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். லகியா மேதி ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் லகியாமேதி மன வருத்ததில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று லகியாமேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லகியாமேதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News