செய்திகள்

திருவண்ணாமலை அருகே கிணற்றில் மண் சரிந்து தொழிலாளி பலி

Published On 2018-10-06 17:17 GMT   |   Update On 2018-10-06 17:17 GMT
திருவண்ணாமலை அருகே கிணற்றில் தூர்வாரும் போது ஏற்பட்ட மண் சரிவில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நல்லவன்பாளையத்தில் உள்ள நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மண்ணில் புதைந்து கிடந்த ராஜேந்திரனை மீட்டனர்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News