செய்திகள்

தூத்துக்குடி அருகே நாளை மின்தடை

Published On 2018-10-05 11:06 GMT   |   Update On 2018-10-05 11:06 GMT
தூத்துக்குடி அருகே நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்கு காரசேரி, காசிலிங்கபிரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, பேரூரணி, திருவனந்தபுரம், அல்லிகுளம், கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம்,

உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம், ராமசாமிபுரம், திம்மராஜபுரம், ஆண்டாள்நகர், தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News