செய்திகள்
உசிலம்பட்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
உசிலம்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர்.சி.பள்ளி அருகே உள்ள சீதா தெருவைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 60). இவர் இன்று அதிகாலை காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்தனர்.
உடனே திடுக்கிட்டு எழுந்த பரமேஸ்வரி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பினர்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.