செய்திகள்

தஞ்சையில் வீடு புகுந்து 2 பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

Published On 2018-10-04 13:56 GMT   |   Update On 2018-10-04 13:56 GMT
தஞ்சையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 பெண்களிடம் 10 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் மாதவராஜ். ஓய்வு பெற்ற தனிப்பிரிவு காவலர். இவரது சகோதரிகள் நீலா, ரஜினி. நேற்று நீலாவும், ரஜினியும் வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த இருவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயின்களை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். காலையில் கண்விழித்துப் பார்த்த இருவரும் செயின்களை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் இதுபற்றி தஞ்சை தெற்கு போலீசில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News