செய்திகள்
குன்னம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
குன்னம் அருகே கருப்பட்டாங்குறிச்சி கிராமத்தில் 2 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பட்டாங்குறிச்சி கிராமத்தில் 2 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதி ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை கண்டித்தும், குடிநீர் விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.