செய்திகள்
கணவருடன் மொபட்டில் சென்ற பெண் சாலையில் விழுந்து பலி
பேருந்தில் சேலை சிக்கியதால் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி ஜீவாநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவரது மனைவி தனலட்சுமி (52). கணவன்-மனைவி இருவரும் மொபட்டில் காந்திமார்க்கெட் பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள சோலாப்பூர் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. திடீரென தனலட்சுமியின் சேலை காற்றில் பறந்து பேருந்தில் சிக்கியுள்ளது. இதனால் அவர் வண்டியில் இருந்து இழுக்கப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் அவரின் தலை, கழுத்து, தோல்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தார்.
மேலும் பைக் சாலையில் விழுந்ததால் அவரது கணவர் முருகேசனுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். இது குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.