செய்திகள்
திருவாரூரில் ஆற்றில் மூழ்கி மாயமான மாணவர் உடல் மீட்பு
திருவாரூரில் ஆற்றில் மூழ்கி மாயமான பிளஸ்-2 மாணவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் சார்லஸ் (வயது 17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சார்லஸ், தனது நண்பர்களுடன் சீனுவாசபுரம் அருகில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், சார்லஸ் தண்ணீர் மூழ்கி மாயமானார். இவருடைய உடலை திருவாரூர் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு அதே பகுதியில் மாணவர் சார்லஸ் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மகன் சார்லஸ் (வயது 17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் சார்லஸ், தனது நண்பர்களுடன் சீனுவாசபுரம் அருகில் உள்ள ஓடம்போக்கியாற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால், சார்லஸ் தண்ணீர் மூழ்கி மாயமானார். இவருடைய உடலை திருவாரூர் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு அதே பகுதியில் மாணவர் சார்லஸ் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.