செய்திகள்
காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை
காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35). இவர் தூசி அருகே உள்ள கீழ்நெல்லி சாலை ஓரம் பிணமாக கிடந்தார்.
அவரது தலை, முகம் உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட படுகாயங்கள் இருந்தன. மர்ம கும்பல் அவரை கொலை செய்து சாலை ஓரம் உடலை வீசி சென்றுள்ளனர்.
தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
ராஜாராமுக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யபட்டார் என விசாரித்து வருகின்றனர். #tamilnews
காஞ்சிபுரம் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35). இவர் தூசி அருகே உள்ள கீழ்நெல்லி சாலை ஓரம் பிணமாக கிடந்தார்.
அவரது தலை, முகம் உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட படுகாயங்கள் இருந்தன. மர்ம கும்பல் அவரை கொலை செய்து சாலை ஓரம் உடலை வீசி சென்றுள்ளனர்.
தூசி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
ராஜாராமுக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யபட்டார் என விசாரித்து வருகின்றனர். #tamilnews