செய்திகள்

நல்லம்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2018-09-20 16:23 GMT   |   Update On 2018-09-20 16:23 GMT
நல்லம்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ளது புறவடை. இந்த கிராமத்தில் உள்ள முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (வயது 28), மணிவண்ணன் (33), சின்னசாமி (41) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News