செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

Published On 2018-09-20 10:43 GMT   |   Update On 2018-09-20 11:41 GMT
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #hraja #drkrishnasamy

சேலம்:

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சேலத்திற்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எஸ்.சி. பட்டியலில் உள்ள பள்ளர், காலாடி, தேவேந்திரகுல வோளாளர் உள்பட 6 இனத்தவரையும் அதில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் வருகிற 6-ந் தேதி திருச்சியில் கட்சியின் இளைஞரணி சார்பில் மாநாடு நடக்கிறது.

எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளனர். பட்டியல் பிரிவில் வைத்துள்ளது அடிமை தனத்திற்கு சமம். எனவே அதில் இருந்து நீக்க வேண்டும். வருகிற தேர்தலில் புதிய தமிழகம் புதிய தளம் அமைத்து அரசியல் களம் காணும்.


வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல எச்.ராஜா வழக்கிலும் அரசு எந்த முடிவையும் எடுக்கலாம் என்றார். #hraja #drkrishnasamy

Tags:    

Similar News