செய்திகள்

ராஜபாளையத்தில் திருட்டு வழக்குகளில் சிறை சென்று வந்தவர் மாயம்

Published On 2018-09-19 11:17 GMT   |   Update On 2018-09-19 11:17 GMT
ராஜபாளையத்தில் திருட்டு வழக்குகளில் சிறை சென்று திரும்பியவர் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32), மைக்செட் தொழிலாளி. இவர் திருப்பூரில் வேலை பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

சில நாட்களில் மாரியப்பனின் நடவடிக்கை பிடிக்காததால், மனைவி பிரிந்து சொந்த ஊர் சென்று விட்டார். அதன் பிறகு கேரளா சென்ற மாரியப்பன் அங்கு பரமேஸ்வரி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து அழைத்து வந்தார். இவர்களுக்கு பெரியசாமி (8), மல்லிகா (5) என 2 குழந்தைகள் உள்ளனர்.

2 குழந்தைகள் ஆன பிறகும் மாரியப்பனின் நடவடிக்கை சரியில்லை என கூறப்படுகிறது. திருட்டு வழக்குகளில் சிக்கி சிறைக்கும் சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த பரமேசுவரி மகனுடன் கேரளா சென்றுவிட்டார்.மகளையும் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து விட்டார்.

2 மனைவிகள் பிரிந்த நிலையில் மாரியப்பனின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அதன் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் தளவாய்புரம் போலீசில் மாரியப்பனின் தாயார் பஞ்சவர்ணம் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News