செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாட்டம் -4 பேர் கைது

Published On 2018-09-15 17:06 GMT   |   Update On 2018-09-15 17:06 GMT
வேப்பனப்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சப்-இன்ஸ் பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், யானைகல்தொட்டி மற்றும் நாச்சிகுப்பம் ரோந்து சென்றனர். 

அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த வேப்பனப்பள்ளி யானைகல் தொட்டி பகுதியை சேர்ந்த ராஜா(24), சாம்ராஜ்(23)., ஜோடுகொத்தூர் பகுதியை சேர்ந்த யுவராஜ்(30)., அரிவானந்தம்(24)., ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்த பணம் ரூ 300, மற்றும் சீட்டுகட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News