செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்
ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமானார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே பொன்னம்மாள்பட்டி காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மனைவி ராஜாகனி(வயது29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வேந்திரன் கொத்தனராக உள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த ராஜாகனி மாயமாகி இருந்தார். மகன்கள் மட்டும் வீட்டில் இருந்தனர்.
மனைவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. எனவே கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாகனி குடும்பபிரச்சினையில் வீட்டைவிட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்