செய்திகள்

குட்கா சோதனை உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்- ஜிகே வாசன் பேட்டி

Published On 2018-09-13 10:13 GMT   |   Update On 2018-09-13 10:13 GMT
குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #Gudka #cbi #centralgovernment

திருப்பூர்:

ஆசியா விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தருணுக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஜி.கே வாசன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும். தமிழக அரசும், அதன் செயல்பாடும் கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக அரசும், போலீசாரும் தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

விழாவில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #gkvasan #Gudka #cbi #centralgovernment

Tags:    

Similar News