செய்திகள்
கருங்கல் அருகே கடன்தொல்லையால் தொழிலாளி தற்கொலை
கருங்கல் அருகே கடன்தொல்லையால் தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே காரவிளையை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 60) சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அறையில் தூக்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அமலதாஸ், மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடன் தொல்லையால் அமலதாஸ் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல் அருகே காரவிளையை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 60) சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அறையில் தூக்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, அமலதாஸ், மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கடன் தொல்லையால் அமலதாஸ் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.