செய்திகள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாட மக்களுக்கு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். #VinayagarChathurthi #OPanneerselvam
சென்னை:
துணை முதல் அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முழு முதற்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப்பெருமானின் திருவருளால் நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெருகட்டும் என்று அம்மாவின் வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். #VinayagarChathurthi #OPanneerselvam
துணை முதல் அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முழு முதற்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப்பெருமானின் திருவருளால் நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெருகட்டும் என்று அம்மாவின் வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். #VinayagarChathurthi #OPanneerselvam