செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ், ஆட்டோ மோதல்- டிரைவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் (வயது 45), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு ராஜபாளையம் புறப்பட்டார்.
மடவார்விளாகம் பகுதியில் ஆட்டோ வந்த போது அந்த வழியே அருளாச்சியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் தனியார் பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பஸ் மோதியது.
இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. டிரைவர் ஜெயபால் காயத்துடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ஜெயபால் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயபால் (வயது 45), ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு ராஜபாளையம் புறப்பட்டார்.
மடவார்விளாகம் பகுதியில் ஆட்டோ வந்த போது அந்த வழியே அருளாச்சியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் தனியார் பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பஸ் மோதியது.
இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. டிரைவர் ஜெயபால் காயத்துடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ஜெயபால் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews