செய்திகள்

பொன்னேரி, சோழவரம் பகுதியில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு

Published On 2018-09-10 09:22 GMT   |   Update On 2018-09-10 09:22 GMT
பொன்னேரி, சோழவரம் பகுதியில் லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை:

பொன்னேரி உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 253 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News