செய்திகள்
ரூ. 6 லட்சம் கடன் பாக்கி- கால்டாக்சி டிரைவரை கடத்திய கும்பலில் 3 பேர் கைது
நிலம் வாங்கியத்தில் ரூ.6 லட்சம் கடன் பாக்கி வைத்த கால் டாக்சி டிரைவரை கடத்திய கும்பலில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
திருவேற்காட்டைச் சேர்ந்தவர் முருகன். கால்டாக்சி டிரைவர்.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்கினார். இதில் ரூ.6 லட்சம் பாக்கி வைத்து இருந்தார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்தது.
இந்த நிலையில் முருகனை 3 பேர் கும்பல் காரில் திருவேற்காட்டில் இருந்து மாதவரத்துக்கு கடத்திச் சென்றன.
பின்னர் முருகனின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று மிரட்டினர். இதனால் முருகன் உறவினர்கள் ரூ.2 லட்சத்தை கொடுத்தனர். இதையடுத்து அவரை கடத்தல் கும்பல் விடுவித்தனர்.
அதன்பின் முருகன் திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை காரில் கடத்திய சதீஷ், ராஜா, பிரேம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கிறார்கள்.
திருவேற்காட்டைச் சேர்ந்தவர் முருகன். கால்டாக்சி டிரைவர்.
இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்கினார். இதில் ரூ.6 லட்சம் பாக்கி வைத்து இருந்தார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்தது.
இந்த நிலையில் முருகனை 3 பேர் கும்பல் காரில் திருவேற்காட்டில் இருந்து மாதவரத்துக்கு கடத்திச் சென்றன.
பின்னர் முருகனின் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசி பணம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று மிரட்டினர். இதனால் முருகன் உறவினர்கள் ரூ.2 லட்சத்தை கொடுத்தனர். இதையடுத்து அவரை கடத்தல் கும்பல் விடுவித்தனர்.
அதன்பின் முருகன் திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை காரில் கடத்திய சதீஷ், ராஜா, பிரேம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கிறார்கள்.