செய்திகள்
திருப்பூருக்கு வேலை தேடி வந்த வாலிபர் ரெயில் மோதி பலி
திருப்பூருக்கு வேலை தேடி வந்த வாலிபர் ரெயில் மோதி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் மலைராஜா (வயது 26). இவர் வேலை தேடி நேற்று ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்தபோது மற்றொரு ரெயில் வேமாக வந்தது.
ரெயில்பாதை நடுவே மலைராஜா நிற்பதை பார்த்த என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பினார். ரெயில் சைரன் சத்தம்கேட்ட மலைராஜா தடுமாற்றம் அடைந்தார். எந்த புறம் செல்வது என்று குழப்பம் அடைந்தார்.
அப்போது வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மலைராஜா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானர்.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமண் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று நண்பருடன் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்தார்.
பொருட்கள் வாங்கி விட்டு திருப்பூர்- ஊத்துக்குளி ரோடு 2-வது பாலம் என்ற இடத்தில் உள்ள இருவழி ரெயில் தண்டவாளத்தை ஹெட்போனில் பாட்டுக்கேட்டவாறு கடக்க முயன்றார்.
அப்போது ரெயில் வருவதை பார்த்து அவருடன் வந்த நண்பர் லட்சுமணனை எச்சரித்தார். ஆனால் லட்சுமண் ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விட்டார்.
அடுத்த தண்டவாளத்தை கடந்தபோது கோவை- ஈரோடு வந்த ரெயில் லட்சுமண் மீது மோதியது. இதில் உடல் சிதறி லட்சுமண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் மலைராஜா (வயது 26). இவர் வேலை தேடி நேற்று ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்தபோது மற்றொரு ரெயில் வேமாக வந்தது.
ரெயில்பாதை நடுவே மலைராஜா நிற்பதை பார்த்த என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பினார். ரெயில் சைரன் சத்தம்கேட்ட மலைராஜா தடுமாற்றம் அடைந்தார். எந்த புறம் செல்வது என்று குழப்பம் அடைந்தார்.
அப்போது வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மலைராஜா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானர்.
இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமண் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று நண்பருடன் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வந்தார்.
பொருட்கள் வாங்கி விட்டு திருப்பூர்- ஊத்துக்குளி ரோடு 2-வது பாலம் என்ற இடத்தில் உள்ள இருவழி ரெயில் தண்டவாளத்தை ஹெட்போனில் பாட்டுக்கேட்டவாறு கடக்க முயன்றார்.
அப்போது ரெயில் வருவதை பார்த்து அவருடன் வந்த நண்பர் லட்சுமணனை எச்சரித்தார். ஆனால் லட்சுமண் ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடந்து விட்டார்.
அடுத்த தண்டவாளத்தை கடந்தபோது கோவை- ஈரோடு வந்த ரெயில் லட்சுமண் மீது மோதியது. இதில் உடல் சிதறி லட்சுமண் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews