செய்திகள்
தாரமங்கலத்தில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பத்திர எழுத்தர் பலி
வேகத்தடையில் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பத்திர எழுத்தர் பலியானார்.
தாரமங்கலம்:
ஜலகண்டாபுரம் காமராஜ நகரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 65). பத்திர எழுத்தர். இவர் வேலையை முடித்துக்கொண்டு தாரமங்கலத்தில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தாரமங்கலம் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது, நிலைதடுமாறி, அவர் கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜலகண்டாபுரம் காமராஜ நகரை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 65). பத்திர எழுத்தர். இவர் வேலையை முடித்துக்கொண்டு தாரமங்கலத்தில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தாரமங்கலம் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் ஏறி இறங்கிய போது, நிலைதடுமாறி, அவர் கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.