ஒட்டன்சத்திரம் அருகே யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி
ஒட்டன்சத்திரம்:
பெத்தேல்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்குள் அடிக்கடி யானை புகுந்து குடிசைகளையும், விளை நிலங்களையும் மிதித்து சேதப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஊருக்குள் வந்த யானை அங்குள்ள ரேசன் கடை ஓடுகளை பிரித்து சேதப்படுத்தியது. மேலும் அருகே இருந்த பள்ளியில் நடப்பட்டிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களையும் சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். இதே பகுதியில் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு யாணை ஒருவரை மிதித்து கொன்றது.
இப்பகுதியில் அடிக்கடி யானைகள் புகுந்து, விலை நிலங்களையும், உடமைகளையும் சேதப்படுத்தி வருவது அங்குள்ள பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானையிடமிருந்து மக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.