செய்திகள்

பல்லடத்தில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிடத்தொழிலாளி தற்கொலை

Published On 2018-09-05 10:11 GMT   |   Update On 2018-09-05 10:11 GMT
மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கணவரை மனைவி கண்டித்ததால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 36). கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை பிரியா கண்டித்தார். ஆனால் குமார் மது அருந்துவதை நிறுத்தவில்லை. நேற்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த குமார் அருகில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்றார். அக்காள் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் நடந்த விழாவுக்கு சென்று விட்டனர். அங்கு சென்ற குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோன்று அரியலூர் மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்தவர் மதன் (19). இவர் பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வெளியே வந்தார். மீண்டும் மதனை காணவில்லை.

நேற்று கம்பெனியின் சமையல் அறையில் பார்த்தபோது மதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News