செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே ரோட்டில் கவிழ்ந்த கார்

Published On 2018-09-01 14:07 GMT   |   Update On 2018-09-01 14:07 GMT
தேன்கனிக்கோட்டை அருகே ரோட்டில் கார் ஒன்று தலைக்குப்புற கவிந்து கிடந்தது. காரின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் சாப்ராங்கனப் பள்ளி கிராமம் அருகே வெள்ளை நிற கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது. காரின் உரிமையாளர் யார்? கார் எந்த பகுதியில் பதிவு செய்யப்பட்ட விபரம் எதுவும் தெரியாத நிலையில் உள்ளது.

சாப்ராங்கனப்பள்ளி கிராம மக்கள் கார் விபத்துக்கு உள்ளான தகவலை தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். காரின் பெயர் "ஸ்விப்ட்'' ஆகும். காரின் நிறம் வெள்ளை.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்தது யார்? காரின் உரிமையாளர் யார்? என்ற கோணத்தில் விபத்துக்கு உள்ளான காரை பற்றி விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News