செய்திகள்
தூத்துக்குடியில் ரெயிலில் சிக்கி டிரைவர் பலி
தூத்துக்குடியில் ரெயிலில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு 4-ம் கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலை சிதறி பிணமாக கிடந்ததார். இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள டக்கம்மாள்புரம் முள்ளூரை சேர்ந்த லாரி டிரைவரான முருகபெருமாள் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.