செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளோம் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

Published On 2018-08-29 19:39 GMT   |   Update On 2018-08-29 19:39 GMT
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி கொண்டிருக்கிறது என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan
சென்னை:

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம். எனவே, இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் இல்லை.

மேலும், தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் #KamalHaasan
Tags:    

Similar News