செய்திகள்

திருச்சியில் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை

Published On 2018-08-29 14:42 GMT   |   Update On 2018-08-29 14:42 GMT
திருச்சியில் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் குட்டி அம்பலக்காரன்பட்டி மெய்யம்மை நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 38), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு சித்தாள் வேலைக்கு சென்றார். பின்னர் மாலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். 

வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பின்னர் வீட்டை சோதனை செய்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்துள்ளது. 

இது குறித்து அவர் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News