செய்திகள்

ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம்

Published On 2018-08-26 11:33 GMT   |   Update On 2018-08-26 11:33 GMT
ஜேடர்பாளையம் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுபாளையம் புதூர் காவேரி ஆற்றின் கரையில் சுமார் 40 வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த பெண் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தார்.

இதை பார்த்த அந்த பகுதி பொது மக்கள் ஜேடர்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஜேடர்பாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோனத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News