ஆறுகளில் மணல் எடுக்க அரசே உடந்தையாக உள்ளது- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
திருச்சி:
திருச்சியில் இன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புனித அஸ்தி தமிழகத்தின் பிரதான நதியான காவிரியில் கரைக்கப்பட்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை உள்ள இயற்கையினை நேசித்தவர் வாஜ்பாய். ஓடும் ஆற்றினை புனிதம் என கருதினார். சுதந்திரத்திற்கு பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர்.
சென்னையில் வருகிற 28ந்தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடை பெறுகிறது. 1ந்தேதி முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளோம் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என கூறினார். #gkvasan #mukkombu #tngovt