செய்திகள்
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவாரூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் கீழத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 16), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் கீழத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 16), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.