செய்திகள்

குடிபோதையில் மதகில் இருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2018-08-22 10:54 GMT   |   Update On 2018-08-22 10:54 GMT
திருத்துறைப்பூண்டியில் குடிபோதையில் மதகில் இருந்து ஆற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது37). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் நேற்று இரவு 8 மணிக்கு மது அருந்தி விட்டு அந்த பகுதியில் உள்ள முல்லையாற்று மதகில் அமர்ந்திருந்தார். திடீரென நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததால் அவரை இழுத்து சென்றது. இதைபார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அவரை தேடி பார்த்தனர். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை தற்காலிகமாக கைவிட்டு இன்று காலை தேடினர். அப்போது அதே பகுதியில் முல்லையாறு கரையோரத்தில் அவரது உடல் ஒதுங்கியிருந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News