செய்திகள்
வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் மதுமிதா (வயது 18). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பண்ணந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவி மதுமிதாவை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மதுமிதா அவரை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த மதுமிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் மதுமிதா (வயது 18). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பண்ணந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவி மதுமிதாவை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மதுமிதா அவரை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த மதுமிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.