செய்திகள்
திருவள்ளூர் அருகே தூக்குப்போட்டு பால் வியாபாரி தற்கொலை
திருவள்ளூர் அருகே வயிற்றுவலி காரணமாக பால் வியாபாரி மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் புண்ணியக்கோட்டி(வயது 44). பால் வியாபாரியான இவர், கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த புண்ணியக்கோட்டி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் புண்ணியக்கோட்டி(வயது 44). பால் வியாபாரியான இவர், கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த புண்ணியக்கோட்டி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.