செய்திகள்

கேரளாவுக்கு உதவ புதுவை அரசு ஊழியர்கள் ரூ.7 கோடி நிதி உதவி

Published On 2018-08-21 03:44 GMT   |   Update On 2018-08-21 03:44 GMT
கேரள மழை வெள்ள நிவாரண நிதிக்கு புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். #Keralasouthwestmonsoon #Keralarain

புதுச்சேரி:

கேரளாவில் கடந்த 9 நாட்களாக பெய்த கனமழை வெள்ளத்தால் அங்கு வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநில அரசு மற்றும் பிறமாநில அரசுகள் கேரளாவுக்கு நிவாரணநிதி அளித்து வருகிறது.

இதற்கிடையே கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை ஏற்று புதுவை அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளனர். அதற்கான ஒப்புதல் கடிதத்தை புதுவையில் உள்ள அனைத்து அரசுஊழியர்கள் சங்க நிர்வாகிகள் இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து அளித்தனர்.

 

இதுகுறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-


எனது வேண்டுகோளை ஏற்று புதுவை அரசு ஊழியர்கள் கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு தங்களது ஒரு நாள் சம்பளத்தை மனமுவந்து வழங்கி உள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இதுபோல் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்களும் ஒருநாள் சம்பளத்தை கேரள மழை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி உள்ளனர். இதன் மூலம் திரட்டப்பட்ட ரூ.7 கோடி நிதியை கேரளாவுக்கு அனுப்ப உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News