செய்திகள்

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-08-20 16:22 GMT   |   Update On 2018-08-20 16:22 GMT
சங்ககிரி அருகே வயிற்று வலி காரணமாக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சங்ககிரி:

சங்ககிரி டி.பி. ரோடு பகுதியை சேர்ந்த உமாபதி மகன் அருண்பாரதி (வயது 20). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அருண்பாரதி வீட்டில் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர் அருண்பாரதியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அருண்பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சங்ககிரி போலீசில் உமாபதி புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News