செய்திகள்

மதுரையில் இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

Published On 2018-08-20 08:50 GMT   |   Update On 2018-08-20 08:50 GMT
மதுரையில் இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 6-வது சந்து, பஞ்சு காம்பவுண்டைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் ஈஸ்வரி (வயது 17). இவர் பழங்காநத்தத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று காலை வேலைக்குச் செல்வதாக கூறிச்சென்ற ஈஸ்வரி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, கருப்பசாமி கோவில் சந்தைச் சேர்ந்தவர் சிவகண்ணன். இவரது மகன் சுபாஷ் (17). சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து டியூசன் செல்வதாக கூறிச்சென்ற சுபாஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

மேற்கண்ட 2 புகார்கள் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மதுரை அருகே உள்ள பனங்காடி அங்கையற்கண்ணி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கனிமொழி (19). இவர் மேலப்பனங்காடியில் உள்ள தனது உறவினருக்கு உதவியாக இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இங்கிருந்து கடைக்குச் சென்று வருவதாக கூறிச்சென்ற கனிமொழி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News