செய்திகள்

கொள்ளிடம் பாலத்தை சீரமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2018-08-18 07:33 GMT   |   Update On 2018-08-18 07:33 GMT
மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Kollidambridge
சென்னை:

திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தில் 18-வது தூணில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அப்பகுதி பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அப்பாலத்தை பார்வையிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்த பிறகு பாலம் முற்றிலும் அகற்றப்படும் என்றார்.

இது தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொள்ளிடம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில், போக்குவரத்து மட்டும் தடை செய்துவிட்டு அ.தி.மு.க. அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் ராணுவ உதவியுடன் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kollidambridge

Tags:    

Similar News