செய்திகள்

மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Published On 2018-08-18 04:41 GMT   |   Update On 2018-08-18 04:41 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகன் மேகநாதன் (வயது 13).

இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மரக்காணம் அருகே உள்ள காணிமேடு என்ற இடத்தில் ஏழுமலையின் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அங்குள்ள பந்தலில் மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. அப்போது மேகநாதன் அந்த பல்புகளை தொட்டான்.

அப்போது அவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News