செய்திகள்

வந்தவாசி அருகே பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டர் மீது தாக்குதல்- ஆட்டோ டிரைவர் கைது

Published On 2018-08-10 11:16 GMT   |   Update On 2018-08-10 11:16 GMT
பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த சீ.மா. புதூரை சேர்ந்தவர் ஏழுமலை (20) இவர் வந்தவாசியில் இருந்து வாச்சனூர் கிராமம் வரை செல்லும் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் பணியில் இருந்தபோது வந்தவாசி கோட்டை மூலைப்பகுதியில் பஸ் நின்று கொண்டு இருந்தது. அப்போது தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத் (22) என்பவர் மினி பஸ் முன்பாகச் சென்று பயணிகளை ஆட்டோவில் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கண்டக்டர் ஏழுமலைக்கும் ஆட்டோ டிரைவர் வினோத்திற்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

அப்போது மினிபஸ் டிரைவர் சேட்டு இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மினி பஸ் வாச்சனூர் கிராமம் சென்றது.

இதனை அடுத்து பின் தொடர்ந்து சென்ற ஆட்டோ டிரைவர் வினோத் வாச்சனூர் கிராமத்தில் மினி பஸ்சை வழி மடக்கி கண்டக்டர் ஏழுமலையை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மேலும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏழுமலை வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வினோத்தை கைது செய்தனர். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News